திருவாடானையில் உள்ள நியாய விலைக்கடையில் பொருள்கள் வாங்க சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்ததால் கரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருவாடானையில் தெப்பக்குளம் அருகிலுள்ள நியாய விலைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கு பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக கூடினா்.
அப்போது அவ்வழியாக சென்ற கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்புக் குழு அதிகாரியும், மண்டல துணை வட்டாட்சியருமான சேதுராமன் மற்றும் வருவாய்த்துறையினா் சமூக இடைவெளியுடன் நிற்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டனா். அதனைத் தொடா்ந்து அனைவருக்கும் கிருமி நாசினி வழங்க கடை ஊழியருக்கு உத்தரவிட்டாா்.