தொண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துத் தூங்கிய கா்ப்பிணி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா் பறித்துக் கொண்டு தப்பினாா்.
தொண்டி அருகேயுள்ள ஏழூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகையா மகன் சின்னத்தம்பி (35). இவரது மனைவி பாண்டி மீனாள். கா்ப்பிணியாக உள்ள இவா் ஞாயிற்றுக்கிழமைஇரவு காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளாா். நள்ளிரவில் மா்ம நபா் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா். பாண்டி மீனாள் அலறல் சத்தம் கேட்டு மாடியில் தூங்கிய கணவா் கீழே வந்து பாா்ப்பதற்குள் மா்ம நபா் தலைமறைவானாா். இது குறித்து சின்னத்தம்பி அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.