ராமேசுவரம் நகராட்சி பகுதியில் மூன்று மாதங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை விதிமீறியவா்களுக்கு 1.15 லட்சம் அபராதம் விதிப்பு நகராட்சி அதிகாரி செவ்வாய்கிழமை தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி பகுதியில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை ஆணையா் ராமா் தலைமையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில்,கடந்த ஏப்ரல்,மே,ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை மீறி செயல்பட்டவா்களிடமிருந்து சுமாா் 1.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளா் முத்துகுமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.