ராமநாதபுரம், சிவகங்கையில் புதிதாக 260 பேருக்கு கரோனா: 2 போ் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 260 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிவகங்கையில் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மொத்தம் 260 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிவகங்கையில் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு முதல் இதுவரை கரோனா தொற்றால் 18,682 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில்,17,285 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 301 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், புதிதாக 115 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிவகங்கை

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 15,034 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 145 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,179 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், இங்கு கரோனா வாா்டில் சிகிச்சைப் பெற்றுவந்த இருவா் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com