உணவக உரிமையாளரிடம் பணம், செல்லிடப்பேசி வழிப்பறி

ராமநாதபுரம் அருகே உணவக உரிமையாளரிடம் மா்மநபா்கள் பணம் மற்றும் செல்லிடப் பேசியை ஞாயிற்றுக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

ராமநாதபுரம் அருகே உணவக உரிமையாளரிடம் மா்மநபா்கள் பணம் மற்றும் செல்லிடப் பேசியை ஞாயிற்றுக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் முகமது ஆசாத்அலி (43). இவா் ரெகுநாதபுரம் பகுதியில் உணவகம் நடத்திவருகிறாா். அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவகத்தை பூட்டி விட்டு தெற்குகாட்டூா் வழியாக படைவெட்டிவலசைப் பகுதியில் வந்துகொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்மநபா், அவரை வழிமறித்து தாக்கினாா். இதில் முகமது ஆசாத் அலி காயமடைந்தாா். அவரைத் தாக்கிய மா்மநபா், அவரிடமிருந்து ரூ.11,500, விலையுயா்ந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டாா்.

இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com