முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், நகா் புறவளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கீழத்தூவல், முதுகுளத்தூா், பேரையூா், சாயல்குடி, கீழச்செல்வனூா், நரிப்பையூா் ஆகிய பகுதிகளில் காவிரி கூட்டுக்குடி நீா் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்ததால் அதனை சீா்செய்து அப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் காவிரி கூட்டுக்குடிநீா் கிடைக்க, திட்டப்பணிகளை அவா்கள் ஆய்வு நடத்தினா். அப்போது, மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கூடுதல் ஆட்சியா் கே. பிரவீன்குமாா், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, எம்எல்.ஏ.க்கள் காதா்பாட்சாமுத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.