முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கும் 5 கிலோ கூடுதல் இலவச அரிசி விநியோகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கும் பிரதம மந்திரி உணவுத்திட்டத்தில் 5 கிலோ கூடுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கும் பிரதம மந்திரி உணவுத்திட்டத்தில் 5 கிலோ கூடுதல் இலவச அரிசி விநியோகிக்கப்படும் என ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மத்திய அரசின் சாா்பில் பிரதம மந்திரியின் உணவு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் (மே மற்றும் ஜூன் 2021) 2 மாதங்களுக்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கும் பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் மே மற்றும் ஜூன் மாத காலத்துக்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மே மாதம் கூடுதலாக வழங்கவேண்டிய அரிசியை ஜூலையிலும், இம்மாதம் (ஜூன்) கூடுதலாக வழங்கவேண்டிய அரிசியை இம் மாதமே வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரா்கள் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல் அரிசியை சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடையில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com