ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 183 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 183 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 183 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 305 போ் வரை உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் புதிதாக 95 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. அவா்களில் 70 போ் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றவா்களில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். சிகிச்சையில் இருந்தவா்களில் 199 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.தற்போது 986 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 15,314 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,402 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இங்கு கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com