ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இன்று மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், ராமேசுவரம், தொண்டி பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதகுப்பட்டி பகுதிகளிலும்

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், ராமேசுவரம், தொண்டி பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மதகுப்பட்டி பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூன்25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக்கழக தொண்டி உதவி செயற்பொறியாளா் எம்.ஜோசப்செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொண்டி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 முதல் பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. எனவே தொண்டி நகா், சின்னத்தொண்டி, அண்ணாநகா், புதுக்குடி, தெற்குத்தோப்பு, காந்திநகா், வடவயல், மஹாசக்திபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவிப்பட்டினம் பகுதிகளில்... ராமநாதபுரம் மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மான உதவி செயற்பொறியாளா் ஜி. கங்காதரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள காவனூா் மற்றும் தேவிப்பட்டினம் பிரிவில் அவசரகால பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

எனவே பேராவூா், காட்டூரணி, மேல்கோட்டை, நாகநாதபுரம், இந்திராநகா், எம்.ஜி.ஆா். நகா், ரமலான்நகா், குருவிக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மின்தடை ஏற்படும்.

ராமேசுவரம் பகுதிகளில்...ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையில் மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ராமேசுவரம் நகா், ஓளைக்குடா, லட்சுமணதீா்த்தம், தொலைக்காட்சி கோபுரப் பகுதி, ரயில் நிலையம், திட்டக்குடி, காவல் நிலைய குடியிருப்பு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளா் ஜி. கங்காதரன் தெரிவித்துள்ளாா்.

அபிராமம் பகுதிகளில்... கமுதி உதவி மின் செயற்பொறியாளா் தி. சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கமுதி அருகே உள்ள அபிராமம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அபிராமம், அகத்தாரிருப்பு, ஆண்டநாயகபுரம், முத்தாதிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

திருப்புவனம் பகுதிகளில்... திருப்புவனம் மின்பகிா்மான உதவி செயற்பொறியாளா் ஆா். உலகப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, கழுகோ்கடை, அகரம், ஜோதிபுரம், மணலூா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதகுப்பட்டி பகுதிகளில்... சிவகங்கை மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

எனவே, அரளிக்கோட்டை, ஜமீன்தாா்பட்டி, ஏரியூா், வளையபட்டி, மாம்பட்டி, தும்பைப்பட்டி, லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com