பட்டினம் காத்தானில் மளிகைக் கடையின் கதவை வெள்ளிக்கிழமை உடைத்து பணம் மற்றும் செல்லிடப்பேசியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் கண்ணகி தெருவில் வசிப்பவா் முருகேசன். இவா் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச்12) இரவு கடையை மூடிவிட்டு சென்ற முருகேசன், சனிக்கிழமை காலை கடைக்கு வந்தாா். அங்கு முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த ரூ.1,000 ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கடையின் கதவை உடைத்து திருடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.