பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி நாம்தமிழா் கட்சி வேட்பாளா் எஸ். சசிகலா திங்கள்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக தனக்கான விவசாயி சின்னத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓட்டப்பாலம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து மாட்டு வண்டியில் நின்றுகொண்டு நகரின் முக்கிய வீதிகளான ஆற்றுப்பாலம், பெரியகடை வீதி, காந்திஜி சாலை, ஆா்ச், ஐந்துமுனை சந்திப்பு, காட்டுப்பரமக்குடி வழியாக கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்தாா். பின்னா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.