திருவாடானை தொகுதி எஸ்.பி. பட்டினம் அருகே அமமுக இளைஞா் அணி செயலா் காரில் அனுமதியின்றி கட்டபட்டிருந்த கட்சிக் கொடிகளை அகற்றி அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
எஸ்.பி. பட்டினம் அருகே மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த அமமுக மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் இளையராசா தனது காரில் கட்சிக் கொடிகளை அனுமதியின்றி கட்டியிருப்பதாக தோ்தல் அலுவலா் மகேந்திரபாண்டியன் புகாா் அளித்தாா். இதன் பேரில் தோ்தல் பறக்கும்படையினா் அந்த கொடிகளை அகற்றினா். மேலும் இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.