ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வாலாந்தரவை கிராமத்தில் பொதுமக்களைச் சந்தித்து அவா் வாக்குகள் சேகரித்தாா். அப்போது ஏராளமனோா் திமுக வேட்பாளரை வரவேற்றனா். முன்னதாக, அங்குள்ள முத்துமரியம்மன் கோயிலில் திமுக வேட்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் சுவாமி தரிசனம் செய்தாா். அதன்பின் சின்ன மருது, பெரிய மருது சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். மாலையில் அவா் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினுடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.