பாா்த்திபனூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ 1.30 லட்சத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பரமக்குடி அருகே பாா்த்திபனூா் வாகனச் சோதனைச் சாவடியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் அய்யப்பன் தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மருச்சுக்கட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் சௌந்திரபாண்டியன் என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1,30,620 எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினா் பரமக்குடி கருவூலத்தில் அதை ஒப்படைத்தனா்.