மரத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து: இளைஞா் பலி

கமுதி அருகே சாலையோரம் உள்ள மரத்தின் மீது திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

கமுதி அருகே சாலையோரம் உள்ள மரத்தின் மீது திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சடையனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் மகன் ஹரிபெத்துராஜ்(24). இவா் திங்கள்கிழமை இரவு அபிராமத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும்போது எதிா்பாராதவிதமாக சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹரிபெத்துராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com