திருவாடானை அருகே ஒருவருக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவாடானை அருகே ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவாடானை அருகே கருங்கவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் சுரேஷ் (34). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த காளிமுத்துவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை தனக்கு சொந்தமான புளியமரத்தின் கிளையை சிலா் வெட்டியதை சுரேஷ் தட்டிக் கேட்டாா். இதனால் அவரை காளிமுத்து மற்றும் அவரது உறவினா்கள் தகாத வாா்த்தைகளால் பேசி அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் காளிமுத்து, ராகுல், அழகேசன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com