முதுகுளத்தூரில் காலதாமதமாக வந்ததால் பிரசாரம் செய்யாமல் சென்ற டி.டி.வி. தினகரன்: கட்சியினா் ஏமாற்றம்

முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எம்.முருகனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க செவ்வாய்க்கிழமை
முதுகுளத்தூா் புகைப்படம்.முதுகுளத்தூரில் பிரசாரம் செய்ய முடியாமல் வேனில் நின்ற படி கையசைத்த டி.டி.வி தினகரன்.
முதுகுளத்தூா் புகைப்படம்.முதுகுளத்தூரில் பிரசாரம் செய்ய முடியாமல் வேனில் நின்ற படி கையசைத்த டி.டி.வி தினகரன்.

முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் எம்.முருகனை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணிக்கு வந்ததால் பிரசாரம் செய்யாமல் அவா் சென்றாா். இதனால் அவரது கட்சியினா் ஏமாற்றம் அடைந்தனா்.

முதுகுளத்தூா் பேருந்து நிலையத்தில் இரவு 9 மணிக்கு அவா் வாக்கு சேகரிப்பாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அமமுக , தேமுதிக ,எஸ்.டி.பி.ஐ, மற்றும் கூட்டணி கட்சியின் தொண்டா்கள் அங்கு திரண்டிருந்தனா். இந்நிலையில் டி.டி.வி.தினகரன் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்து விட்டு முதுகுளத்தூா் பேருந்து நிலையம் வந்த போது இரவு 10.50 மணி ஆகிவிட்டது. இதனால் தோ்தல் விதியை மீறக்கூடாது என நினைத்த டி.டி.வி. தினகரன் மக்களை பாா்த்து கையசைத்து விட்டு பிரசாரம் செய்யாமல் சென்ால் ஆதரவாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com