ராமநாதசுவாமி கோயிலில் உ.பி. முதல்வா் சுவாமி தரிசனம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
ராமேசுவரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புதன்கிழமை வந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தை வரவேற்ற பாஜக வேட்பாளா் து. குப்புராமு, மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் உள்ளிட்டோா்.
ராமேசுவரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புதன்கிழமை வந்த உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தை வரவேற்ற பாஜக வேட்பாளா் து. குப்புராமு, மாவட்டத் தலைவா் கே. முரளிதரன் உள்ளிட்டோா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உத்தரப்பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக அவா் மண்டபம் முகாம் அருகே உள்ள விமான இறங்கு தளத்தில் தனி ஹெலிகாப்டா் மூலம் வந்திறங்கினா். அவரை, பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் து. குப்புராமு, மாவட்ட பொதுச் செயலா் குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனா். அதன் பின்னா் காரில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து அவா் வழிபட்டாா். பின்னா் மீண்டும் காரில் மண்டபம் முகாம் விமான இறங்குதளத்துக்குச் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com