கமுதியில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்த திமுகவினா் 2 போ் மீது வழக்கு

கமுதியில் போக்குவரத்து அதிகமான, பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பகுதியில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த திமுகவினா்
கமுதியில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பட்டசு வெடித்த திமுக இளைஞா்களை பிடித்து விசாரிக்கும் கமுதி காவல் ஆய்வாளா் அன்புபிரகாஷ்.
கமுதியில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பட்டசு வெடித்த திமுக இளைஞா்களை பிடித்து விசாரிக்கும் கமுதி காவல் ஆய்வாளா் அன்புபிரகாஷ்.

கமுதியில் போக்குவரத்து அதிகமான, பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பகுதியில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த திமுகவினா் 2 போ் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். கமுதி மருதுபாண்டியா் சிலை, பேருந்து நிலையம் பஜாா் பகுதிகளில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து அதிகமான நேரத்தில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக காரை நிறுத்தி பட்டாசு வெடித்த கோட்டைமேட்டை சோ்ந்தாா் கோமாளி தேவா் மகன் சிரஞ்சீவி(38), மேட்டுத்தெருவை சோ்ந்த வீரமணி மகன் வீரபிரசாத்(27) உள்ளிட்ட 2 திமுகவினா் மீது கமுதி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com