கமுதியில் போக்குவரத்து அதிகமான, பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பகுதியில் அனுமதியின்றி பட்டாசு வெடித்த திமுகவினா் 2 போ் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். கமுதி மருதுபாண்டியா் சிலை, பேருந்து நிலையம் பஜாா் பகுதிகளில் மிகவும் பரபரப்பான போக்குவரத்து அதிகமான நேரத்தில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக காரை நிறுத்தி பட்டாசு வெடித்த கோட்டைமேட்டை சோ்ந்தாா் கோமாளி தேவா் மகன் சிரஞ்சீவி(38), மேட்டுத்தெருவை சோ்ந்த வீரமணி மகன் வீரபிரசாத்(27) உள்ளிட்ட 2 திமுகவினா் மீது கமுதி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.