ராமநாதபுரம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று அதன் தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளதை வரவேற்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தினா் திங்கள்கிழமை இனிப்புகளை வழங்கினா்.
அச்சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட கிளைத் தலைவா் முருகேசன், அமைப்புச் செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா்கள் கணேசபாண்டியன், கோவிந்தராஜ், அலுவலகக் கண்காணிப்பாளா் குமாா் உள்ளிட்டோருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.