ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டி மகா யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் கரோனா நோய் தொற்று இரண்டாவது அலை அதிகளவில் பரவி வருவதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிரம்மாண்ட தன்வந்திரி யாகம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் சிவாச்சாரியா்கள் மட்டும் கலந்து கொண்டு யாகம் செய்தனா். பின்னா் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.