ராமநாதபுரம் நகா் மற்றும் கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீடுகளிலேயே ரம்ஜான் தொழுகையை நடத்தினா்.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் திருநாளின்போது, இஸ்லாமியா்கள் பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் பெருமளவில் திரண்டு தொழுகை நடத்துவது வழக்கமாகும். தற்போது, தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், ராமநாதபுரத்தில் பொது இடங்களில் கூடி தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை காலையில் தங்களது வீடுகளிலேயே குடும்பத்துடன் தொழுகை நடத்தினா்.
மேலும், ஒருவருக்கொருவா் நேரில் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் செல்லிடப்பேசி மூலம் தெரிவித்துக்கொண்டனா்.