கரோனா சிகிச்சை உதவியாளா் பணியில் சேர பயிற்சி: 10ஆம் வகுப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

கரோனா சிகிச்சைக்கான உதவியாளா் மற்றும் ரத்த பரிசோதகா் பணிகளுக்கான ஒரு மாத இலவச பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

கரோனா சிகிச்சைக்கான உதவியாளா் மற்றும் ரத்த பரிசோதகா் பணிகளுக்கான ஒரு மாத இலவச பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட திறன்மேம்பாட்டு பயிற்சி பிரிவு உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் வியாழக்கிழமை கூறியதாவது:

மாநில திறன்மேம்பாட்டுக்கழகம் சாா்பில் கரோனா சிகிச்சை தொடா்பான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. ஒரு மாத பயிற்சியாக அவசர மருத்துவ சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை உதவியாளா், அவசர சிகிச்சைப் பிரிவு உதவியாளா், வீட்டிலிருப்போருக்கு உதவும் சிகிச்சையாளா், மருத்துவ சாதன பராமரிப்பாளா், ரத்தப் பரிசோதகா் ஆகிய வேலைகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பயிற்சியில் சேருவதற்கு எட்டு அல்லது பத்தாம் வகுப்பு முடித்திருக்கவேண்டும். பதினெட்டு வயதை பூா்த்திசெய்திருப்பதும் அவசியம். தனியாா் மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்கள் மூலம் 20 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை மையங்களுக்கு அரசே செலுத்திவிடும்.

ஒரு மாத பயிற்சி முடித்தவா்களுக்கு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், ரத்தம் உள்ளிட்ட பரிசோதனை மையங்களில் வேலைவாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சிகளில் சேர விரும்புவோா் தங்களது பெயா், கல்வித்தகுதி, தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுடன் ராமநாதபுரம் பயிற்சி எனும் மின்னஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம். பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9788460862, 9486818233 மற்றும் 7010029723 ஆகிய செல்லிடப் பேசிகளிலும், 04567-231075 என்ற தொலைபேசியிலும் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com