ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் முதல்நிலைக் காவலா் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவின்பேரில், பொதுமுடக்க விதிகளை மீறி வாகனத்தில் செல்பவா்களை எச்சரித்து அனுப்புதல், அபராதம் விதித்தல் என, காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், காவல் துறையினா் வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளின்போது, பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியுள்ளாா்.
ஆனால், ராமேசுவரம் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக இருந்த முதல்நிலைக் காவலா் ராஜ்குமாா், வாகனச் சோதனையின்போது பொதுமக்களிடம் அத்துமீறி நடந்ததாகப் புகாா் எழுந்தது. அதனடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி, முதல்நிலைக் காவலா் ராஜ்குமாரை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.