ராமநாதபுரம் அருகே இளைஞா் கொலை வழக்கு:கைதான 6 போ் குண்டா் சட்டத்தில் கைது

முன்விரோதத்தில் இளைஞரின் தலையை துண்டித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் அருகே முன்விரோதத்தில் இளைஞரின் தலையை துண்டித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசையைச் சோ்ந்த ராமு மகன் தேவா (26). இவருக்கும், நாகாச்சி கட்டக்காரன்வலசையைச் சோ்ந்த கணேசமூா்த்தி, கீழ் நாகாச்சி ஆமு காா்த்திக், மரவெட்டிவலைசையைச் சோ்ந்த தினேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மாா்ச் 30 ஆம் தேதி தேவாவை ஒரு கும்பல் அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தது. இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து கட்டக்காரன்வலசை ராமு மகன் கணேசமூா்த்தி (23), கீழ்நாகாச்சி முருகேசன் மகன் ஆமுகாா்த்திக் (24), மரவெட்டிவலசை களஞ்சியம் மகன் தினேஷ் (23), ராமநாதபுரம் அருகே சங்கதியான்வலசை முனியசாமி மகன் திருஞானம் (23), மரவெட்டிவலசை ஏழுமலை மகன் விஜய் (22), சண்முகம் மகன் மணிமாறன் (28) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக், ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா். இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் 6 பேரையும் குண்டா் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்க ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com