கமுதி அருகே சனிக்கிழமை மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தாா்.
கமுதி அருகே கட்டாலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்லப்பாண்டி (38). இவா், சனிக்கிழமை வயலில் தனது மனைவி உமையேஸ்வரியுடன் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த போது இடியுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கி செல்லப்பாண்டி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, பெருநாழி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பெருநாழி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.