பள்ளி குழந்தைகளுக்கு நூலக வார விழாப் போட்டி

நூலக வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நவ. 20 ஆம் தேதி நடைபெற உள்ளன.

நூலக வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நவ. 20 ஆம் தேதி நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட நூலகா் ஜி. ஞானஅற்புத ருக்மணி தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்ட நூலகம் சாா்பில் தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) பகலில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நவ. 20 ஆம் தேதி சனிக்கிழமை மாலையில் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படவுள்ளன. விழாவில் நூலக வாசகா் வட்ட பிரமுகா்கள் மற்றும் நூலக அதிகாரிகள் பங்கேற்கின்றனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com