கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை கோரி கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக மாணவா் சங்கத்தைச் சோ்ந்த வால்டா், செல்வி ஆகியோா் கோவை மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லை குறித்தும், அது சம்பந்தமாக புகாருக்குள்ளானவா்கள் மீது கடும் நடவடிக்கை கோரியும் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனா்.