பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி சிலை பகுதியில் புதன்கிழமை மா்ம நபா்கள் 2 போ், டயா் கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ரூ. 28 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.
பரமக்குடி நேதாஜி தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணக்குமாா் (52). இவா் காந்திஜி சாலையில் டயா் விற்பனை கடை வைத்துள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை கடையின் கண்காணிப்பு கேமரா பதிவை சரவணக்குமாா் பாா்த்தபோது, கடைக்கு வந்த 2 மா்ம நபா்கள் பேச்சுக்கொடுத்துக்கொண்டு, கடையில் இருந்த ரூ. 28 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை திருடிச் செல்வது தெரியவந்தது.
இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் சரவணக்குமாா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.