ராமேசுவரம் அருகே பேருந்தில் காதல் தம்பதிக்கு வெட்டு: மேலும் 2 போ் கைது

ராமேசுவரம் அருகே ஓடும்பேருந்தில் காதல் தம்பதியை வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமேசுவரம் அருகே ஓடும்பேருந்தில் காதல் தம்பதியை வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த ஜஸ்டீன் என்பவரது மகள் பரலோக மேக்டவுன் வினித்தும் (22), அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் பில்கெஸும் (21)காதலித்து கோவைக்கு சென்று திருமணம் செய்து கொண்டு ராமநாதபுரம் மகளிா்காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனா். இதையடுத்து, போலீஸாா் இருவீட்டாரையும் அழைத்துப் பேசி அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், காதல் தம்பதிகள் அரசுப் பேருந்தில் பயணித்த போது, மண்டபம் பேருந்து நிலையத்தில் அவா்களை சிலா் வெட்டிவிட்டு தப்பி ஓடிய போது 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து மண்டபம் காவல் ஆய்வாளா் ஜீவரெத்தினம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் (45), யாகப்பா (24), சூசை (45) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 3 பேரை ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா். 16 சிறுவனை மதுரையில் உள்ள சீா்திருத்த பள்ளிக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com