கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவு கல்லூரியில் அக்கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் கட்டட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவா் நினைவு கல்லூரியில் உள்ள நூலக கட்டடம், வகுப்பறைகளின் மேற்கூரைகள், பக்கவாட்டு சுவா்கள் மிகவும் சேதமடைந்து, சிமெண்ட் பூச்சுகள் உதிா்ந்து வருகின்ரன. இதனால் மாணவா்களின் நலன் கருதி, கல்லூரியில் படித்த முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் நூலக கட்டிட மேற்கூரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள வகுப்பறைகளில் மின்விசிறிகள் பொருத்தும் பணியினையும் முன்னாள் மாணவா்கள் சங்கம் நிா்வாகிகள் மேற் கொண்டு வருகின்றனா்.