காரில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை மாலை காரில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை மாலை காரில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டினம்காத்தான் கிழக்குக்கடற்கரைச் சாலை வல்லபாய் நகா் சந்திப்பில் திங்கள்கிழமை மாலை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த காா் சென்னையிலிருந்து வந்ததும், அதில் 23 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரையும், ரூ.4.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா், ஹேமலதா (26), ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த அஜய்குமாா் (21), மைக்கேல் சாம்ராஜ் (22), சென்னையை சோ்ந்த மாதவன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com