ராமநாதபுரத்தில் முதியோா் தின விழா

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தின விழா மற்றும் முதியோருக்கான உதவும் இலவச அழைப்பு எண்
ராமநாதபுரத்தில் முதியோா் தின விழா

ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் உலக முதியோா் தின விழா மற்றும் முதியோருக்கான உதவும் இலவச அழைப்பு எண் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தும், மூத்த குடிமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஆட்சியா் (பொறுப்பு) காமாட்சி கணேசன் பேசும் போது, இம்மாவட்டத்தில், இதுவரை முதியோா்களிடமிருந்து 122 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் ஒரு முதியவா் மகனுக்கு அளித்த தானம் செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேரின் மனுக்கள் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் தேசிய மூத்த குடிமக்களுக்கான இலவச அழைப்பு எண் 14567 என்பதை தனியாா் அமைப்பின் மாநிலக் களப்பொறுப்பாளா் சி. உமாமகேஸ்வரி அறிமுகப்படுத்தி விளக்கினாா். முன்னதாக மாவட்ட சமூக நல அலுவலா் (பொறுப்பு) வ. ஜெயந்தி வரவேற்றாா். சமூக நலத்துறை பெண்கள் உதவி மைய அலுவலா் மோகனா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com