ராமேசுவரத்தில் கழிவு கால்வாயில் அகற்றப்பட்ட கழிவுகள் சாலையில் குவிக்கப்படுவதால் வீசும் துா்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ராமேசுவரம் நகராட்சிக்கு பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் கழிவுநீா் கால்வாயில் தேங்கியிருக்கும் மணல் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால் குறைந்த ஊழியா்கள் கால்வாய் தூா்வாரும் பணியில் ஈடுபடுவதால் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றி சாலையோரம் குவித்து வைத்து விட்டு செல்கின்றனா். முறையான அகற்றாமல் நான்கு நாள்கள் இதே இடத்தில் குவித்து வைப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்;றனா். உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துனா்.