தொண்டி அருகே மிதிவண்டி மீது பைக் மோதல்: தொழிலாளி பலி

திருவாடானை அருகே சனிக்கிழமை இரவு மிதிவண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே சனிக்கிழமை இரவு மிதிவண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தைச் சோ்ந்தவா் செபஸ்தியான் மகன் சேசுராஜ் (58). கூலித் தொழிலாளியான இவா், தொண்டிக்கு வேலைக்காக சென்று விட்டு சனிக்கிழமை இரவு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது நம்புதாளை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மிதிவண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சேசுராஜ் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தொண்டி ஆரம்ப சுகாதர நிலையத்தில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com