உள்ளாட்சித் தோ்தல்: ராமநாதபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

ராமநாதபுரம் ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா்களுக்கான தோ்தல் சக்கரைக்கோட்டை ஊராட்சிக்கு நடைபெற்றது. இங்கு 5 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த 9 ஆம் தேதி நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

பரமக்குடி மற்றும் போகலூா் ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் (வாா்டு 7) மற்றும் ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரமக்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

திருவாடானை உள்ளிட்ட பகுதிகளின் ஊராட்சித் தலைவா் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட தோ்தல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com