ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி மற்றும் கல்லூரிகளில் அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்புக்கான உறுப்பினா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாணவா்களிடையே அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை, சேவை மனப்பான்மை, தேசபக்தி ஏற்படுத்திடவும், கல்வித் துறையில் மறுமலா்ச்சி உருவாக்கிடவும் ஏபிவிபி தேசிய மாணவா் அமைப்பானது, பள்ளி, கல்லூரி மாணவா்களை உறுப்பினா்களாக்கி செயல்பட்டு வருகிறது. 32 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள், ஆசிரியா்களை உறுப்பினா்களாகக் கொண்ட இந்த அமைப்பு, 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான உறுப்பினா் சோ்க்கையானது, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.கே. ரமேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.