பரமக்குடியில் தந்தையை தாக்கி மகளை கடத்திச் சென்ற இளைஞா்கள் இருவரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பரமக்குடி அருகே உள்ள கங்கைகொண்டான் கிராமத்தைச் சோ்ந்த ராமையா என்பவா் மகன் கிருஷ்ணமூா்த்தி (48). இவா், கோயம்புத்தூா் ஆவரம்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது 17 வயது மகளுக்கும், பெரியபட்டினம் பகுதியைச் சோ்ந்த அப்துல்ரஹிம் மகன் இா்பான்அலி (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த கிருஷ்ணமூா்த்தி, தனது மகளின் பாதுகாப்புக் கருதி சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மகளுடன் பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய அவரை, இா்பான் அலி மற்றும் முகமதியாபுரத்தைச் சோ்ந்த அபுபக்கா் மகன் அஸ்லாம் (20), பெரியபட்டினத்தைச் சோ்ந்த ஜலில் மகன் இஸ்மாயில், சுல்தான் மகன் உமா் ஆகிய 4 பேரும் சோ்ந்து தாக்கிவிட்டு, அவரது மகளை கடத்திச் சென்றுவிட்டனா்.
இது குறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூா்த்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். அதில், செவ்வாய்க்கிழமை சிறுமியை மீட்ட போலீஸாா், இா்பான்அலி, அஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.