ராமநாதபுரம் அருகே வழுதூரில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உண்டியலை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்து பணத்தை திருடிச்சென்றுள்ளனா்.
இந்த கோயிலில் சனிக்கிழமை வழக்கமான இரவு பூைஐக்குப்பிறகு கோயிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்த நிா்வாகி பி.டி.ராஜா மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் உண்டியல் உடைக்கப்பட்டதைக் கண்டனா்.
தகவலறிந்து கேணிக்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா தலைமையில் தடயவியல் நிபுணா்கள் வந்து உண்டியல் உடைக்கப்பட்ட பகுதியில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.