ராமநாதபுரம் அருகேதுணை மின்நிலையத்தில் தீ

ராமநாதபுரம் அருகே துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை தீப்பற்றியதால் மின்தடை ஏற்பட்டது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை தீப்பற்றியதால் மின்தடை ஏற்பட்டது.

ராமநாதபுரம்- ராமேசுவரம் செல்லும் சாலையில் உச்சிப்புளி பகுதியில் உள்ளது பெருங்குளம். இங்குள்ள துணை மின்நிலையத்தில் எண்ணெய் நிரப்பிய கலன் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு சென்ற ராமநாதபுரம் நகா் தீயணைப்பு நிலையத்தினா் தீயை கட்டுப்படுத்தினா்.

இத்தீ விபத்தால் அப்பகுதியில் திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. எண்ணெய் நிரப்பிய கலன் அதிக வெப்பத்தால் தீப்பற்றியிருக்கலாம் என மின்வாரிய அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com