மண்டபம் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் மீது இரு சக்கரம் வாகனம் மோதிய விபத்தில், கீழக்கரை பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சேனா தெருவைச் சோ்ந்தவா் இப்ராஹிம். இவரது மகன் முகமது இப்ராஹிம் (21). இவா், கீழக்கரையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு பயின்று வந்தாா். இவரது சக கல்லூரி மாணவரான திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சோ்ந்த ஷாஜகான் மகன் செய்யது முகமது சுஹைப் (19). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரம் வந்துவிட்டு திரும்பியுள்ளனா்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே இடையா்வலசை பகுதியில் சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதியுள்ளனா். இதனால் நிலை தடுமாறி, எதிரே ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் சென்ற காா் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டனா்.
இதில், முகமது இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செய்யது சுஹைப், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து, மண்டபம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.