ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் வியாழக்கிழமை (செப்.16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் நகா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜசூா்ய மடை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக சக்கரக்கோட்டை, சின்னக்கடைத் தெரு, புளிக்காரத்தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, வண்டிக்காரத்தெரு, தங்கப்பாநகா், அரண்மனை, வடக்குத் தெரு, நீலகண்டி ஊருணி.
முதுநால், சூரன்கோட்டை, இடையாா்வலசை, சிவன்கோவில் பகுதி, பெரியாா்நகா், சாலைத்தெரு, மதுரை சாலை, எட்டிவயல், லாந்தை, அச்சுந்தன்வயல், சித்தூா், பயோனிா் மருத்துவமனை,பட்டிணம்காத்தான், கழுகூரணி, வாணி மற்றும் சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.