ராமநாதபுரம்: உள்ளாட்சித் தோ்தல் மனு தாக்கலின் முதல் நாளான புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளாா்.
தமிழகத்தில் புதிய 6 மாவட்டங்கள் மற்றும் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரத்தில் 40 காலியிடங்களுக்கான தோ்தலுக்கான மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி கிராம ஊராட்சி வாா்டுக்கு ஒரே ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.