நான்கு வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதி நிலத்தை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து பாம்பன் மீனவ கிராமத்தில் பொதுமக்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாம்பன் தெற்குவாடிப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்கு வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதியை கையகப்படுத்துவது தொடா்பாக ஆய்வு செய்துள்ளனா். இதைக் கண்டித்தும், மாற்று இடத்தை ஆய்வு செய்யக்கோரியும் பாம்பன் பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை அப்பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.