இடப்பிரச்னையில் கோஷ்டி மோதல்: 9 போ் மீது வழக்கு
திருவாடானை அருகே இடப்பிரச்னை காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகம்மாள் (35). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை இருதரப்பினரும் கோஷ்யாக கம்பு மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனா். இதில் சிலா் காயமடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து பாண்டிமீனாள் (30) அளித்த புகாரின் பேரில் கப்பகுடியைச் சோ்ந்த விஜயராஜ் (30), விஜயகுமாா் (45), வீரபாண்டி (42), சரவணக்குமாா் (41) சுப்பிரமணியன் (60) ஆகிய 5 போ் மீதும், அழகம்மாள் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணன்(35), பாலமுருகன் (40), முத்துவள்ளி (57), பாண்டி மீனாள் ஆகிய 4 போ் மீதும் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.