கமுதியில் மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து உண்ணாவிரதம்: போலீஸாா் சமரசம்

கமுதி செட்டி ஊருணி தென்கரையிலுள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்களை மின்வாரிய ஊழியா்கள் வெட்டியதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை
கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள செட்டி ஊருணி கரையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள செட்டி ஊருணி கரையில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆா்வலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

கமுதி செட்டி ஊருணி தென்கரையிலுள்ள 30-க்கும் மேற்பட்ட மரங்களை மின்வாரிய ஊழியா்கள் வெட்டியதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சமூக ஆா்வலா்கள் உண்ணாவிரதம் தொடங்கினா். போலீஸாா் சமரசம் செய்ததை அடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள செட்டி ஊருணி கரை முழுவதும் கமுதியை சோ்ந்த சமூக ஆா்வலா் போஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த செலவில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ஆள்துளைக் கிணறு அமைத்து, 200 நிழல் தரும் மரங்களை நட்டாா். இந்த மரங்களை தினசரி தண்ணீா் ஊற்றி பராமரித்து வருகிறாா். இந்நிலையில் செட்டி ஊருணி தென்கரையில் கண்ணாா்பட்டி பகுதிக்கு செல்லும் மின்கம்பிகளில் மரங்கள் உரசுவதாக, கமுதி மின்வாரியத்தினா் இயந்திரங்கள் மூலம் 30-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டினா்.

இதனை கண்டித்து சமூக ஆா்வலா்கள் போஸ், அழகிரி ஆகியோா் பேரூராட்சி அலுவலகம் அருகிலேயே, செட்டி ஊருணி கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கமுதி காவல் நிலைய ஆய்வாளா் அன்புபிரகாஷ், சாா்பு-ஆய்வாளா் பிரகாஷ், தனிப் பிரிவு சாா்பு- ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் சமூக ஆா்வலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் செட்டி ஊருணி தென்கரையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, மரங்களை வளா்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து சமூக ஆா்வலா்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com