வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
இப்புயல் காரணமாக மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. மேலும் மீனவா்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்ல ராமேசுவரம், மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநா்கள் தடை விதித்துள்ளனா்.