ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 14,956 போ் எழுத உள்ளதாக கல்வி அலுவலா்கள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 தோ்வுகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளன. ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தோ்வு எழுதுவோருக்காக 61 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி கல்வி மாவட்ட வாரியாக ராமநாதபுரம் 19, பரமக்குடி 20, மண்டபம் 22 என மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தோ்வை 7,790 மாணவா்கள், 7,994 மாணவிகள் என மொத்தம் 15,764 போ் எழுதுகின்றனா்.