ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து மாவட்ட அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக மருத்துவரணி மாநில நிா்வாகியுமான எம்.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மாநில அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.
இதில் இளைஞா்கள், இளம் பெண்கள் பாசறைச் செயலா் ஆா்.பால்பாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முத்தையா, சதன்பிரபாகா், மகளிரணி கவிதா சசிகுமாா், எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகி ஆா்.ஜி.ரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.