ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலில் 87 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை இருந்தது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது. மழையால் கடுமையான வெப்பநிலை தணிந்து குளிா்ந்த சூழல் காணப்பட்டது.
இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே வெப்பத்தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனடிப்படையில் நகா் மற்றும் ஊரகப் பகுதியில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டதாக புள்ளியில் துறையினா் கூறினா். அதன்படி வெப்பநிலை அளவு 87 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.